குகை ஓவியங்களுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ளை பொற்கோவில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்புக்கு கிழக்கே 148 கிலோ மீற்றர் தூரத்திலும், கண்டிக்கு வடக்கே 72 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ள பழமையான குகைக் கோவிலாகும். சுற்றிலுமுள்ள சம நிலத் திலிருந்து சுமார் 160 மீற்றர் உயரத்திற்கு எழும் மலை மீது இக் குகைத் தொகுதி அமையப் பெற்றுள்ளது. இதுவரை 80ற்கு மேற்பட்ட குகைகள் இப் பகுதியில் கண்டறியப் பட்டுள்ளன. அதில் 5 குகைகள் மிகவும் முக்கியமானவைகளாகக் கொள்ளப்படுகின்றது. இங்கு புத்த பெருமானின் 153 சிலைகளும் அரசர்களின் சிலைகளும் 4 தெய்வச் சிலைகளும் காணப்படுகின்றன. அந்த 4 தெய்வச் சிலைகளில் இந்துக் கடவுள்களான விஸ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்குகின்றன.
சுமார் 2100 சதுர மீற்றர் பரப்புள்ள சுவர் ஓவியங்களைக் கொண்டுள்ள இக்குகை கோவிலில் “மாரா பேயின் சலனம்” மற்றும் புத்தரின் முதற் பிரசங்கத்தின் முத்தாய்ப்பு போன்ற மிகப் பிரசித்தி பெற்ற ஓவியங்களில் முக்கியமானவையாகும். உலகின் பாரம்பரிய தளமாக விளங்கும் பழமையும் சிறப்பும் மிகுந்த தம்புள்ளை பொற்கோவிலை யுனேஸ்கோ நிறுவனம் 1991ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறி- வித்திருந்தது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
ஆதி காலங்களில் வெறும் குகைகளாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இவை முதல் நுலீற்றாண்டுகளில் தான் கோவிலாக மாற்றப்பட்டது. வலகம்மா எனும் மன்னன் தென்னிந்தியர்களால் அனுராதபுரத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன் தலைநகரைக் கைப்பற்றியதால் தனது கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் தான் இக்குகைள் கோவில்களாக மாற்றப்பட்டது என்கிறது வரலாறு. தம்புள்ளை உல்லாசப் பயணத்துறையில் முக்கியம் வாய்ந்தது தம்புள்ளை பொற்கோவில் ஆகும்.
செல்வி பவானந்தன் கலாஜனி
தரம் 11